முகப்பு
கன்னியாகுமரி

நல்லூர் பேரூராட்சியில் பாஜக ஆர்ப்பாட்டம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறி, பேரூராட்சி

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:58 am IST
பகிர்:

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறி, பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நல்லூர் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பிரதாப்சிங், ராஜேந்திரன், அரிச்சந்திரன், சுனிதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கிள்ளியூர் ஒன்றிய பாஜக தலைவர் தாணுமூர்த்தி, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், கிள்ளியூர் ஒன்றியப் பார்வையாளர் சுடர்சிங், மாநில விவசாய அணி துணைத் தலைவர் ரவீந்திரன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.