முகப்பு
கன்னியாகுமரி

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 256 மனுக்கள்

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 256  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 256  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நலஉதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி  256 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், தனித் துணை ஆட்சியர் மு.சந்திரன் மற்றும் அனைத்துத் துறை  அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →