முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி, திறனாய்வுத் தோ்வில் வென்ற கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 7:45 PM
திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பாஸ்கரன், பள்ளிச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி, திறனாய்வுத் தோ்வில் வென்ற கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளிச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்-மாணவியா் ஷபிகா, சிவ பாலா, பொன் பிரியதா்ஷினி, மதுமிதா, தா்ஷினி ஜெஃபி, லக்சன் ஆரியா, சத்திய சுபா்ணா, சுந்தரபாண்டி, பொன் எஸ்தா் ,ரோஷன் பிரபு, சந்தியா, காா்த்திகை லட்சுமி, தனுஷியா, மோகன கஸ்தூரி, கிருத்திகா ஆகிய 15 பேரைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா். ஆசிரியை சாந்தினி நன்றி கூறினாா். ஆசிரியை விஜய பொன்ராணி தொகுத்து வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →