கன்னியாகுமரி

பொன்மனை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

DIN


பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தலைவராக எம். வல்சகுமார் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இக்கூட்டுறவு சங்க தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவு அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம். வல்சகுமார் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். இவர் குமரி மாவட்ட சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலராகவும் உள்ளார். இக்கூட்டுறவு சங்கத்தில் கார்த்திகேயன் துணைத் தலைவராக பதவியேற்றார்.
ரப்பர் தோட்டத் தொழிலாளர் சிக்கன நாணய சங்கம்: குமரி மாவட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர் சிக்கன நாணய சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் சிஐடியூ அணியினர் வெற்றி பெற்றிருந்த நிலையில், இங்கு தலைவராக மரிய மிக்கேல், துணைத் தலைவராக ஆபிரகாம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT