கல்குளம் வட்ட ஆசிரியர் கூட்டுறவு சிக்கனநாணயச் சங்க பேரவைக் கூட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் எம்.சாந்த சீலன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். தங்கம் அறிக்கை வாசித்தார். சங்கச் செயலர் ஜஸ்டஸ் ஜான் தீர்மானங்களை வாசித்தார். லதா ரஜின் விளக்கவுரையாற்றினார். ரமேஷ் வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு 14 சதவீத பங்கு ஈவுத்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தை அஜின் ஒருங்கிணைத்தார். விஜயகுமார் நன்றி கூறினார்.