திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்
திங்கள்நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஐ (எம்எல்) கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரிதிங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்
திங்கள்நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஐ (எம்எல்) கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திங்கள்நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஐ (எம்எல்) கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்.சுசீலா தலைமை வகித்தார். நிர்வாகிகள் மேரி ஸ்டெல்லா, சூசைமரியான், கணபதி, செல்வராஜ், வி.ஐயப்பன், அமல், டி.ஐயப்பன், அர்ஜூனன், செல்வமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் எஸ்.எம். அந்தோணிமுத்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கார்மல், தங்கவடிவு, சுதன், வேலம்மாள், ஜெயக்குமார், சாந்தி , ஜாக்குலின், செல்வன், லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் பொய்யான வாக்குறுதி, பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்தவில்லை, இலவச கல்வி, மருத்துவம், அனைவருக்கும் பென்சன், குறைந்த பட்ச கூலி ரூ .21ஆயிரம் மற்றும் மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.