படந்தாலுமூடு கல்லூரியில் பயிலரங்கம்
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கற்றல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கற்றல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினார். தலைவர் பான்ஸ் ஜாய் விழாவை தொடங்கிவைத்துப் பேசினார். திருவனந்தபுரம் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி பேராசிரியர் ஐசக்பால் பேசினார். விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கமல செல்வராஜ் சான்றிதழ்கள் வழங்கினார்.
பேராசிரியை ரோஸ்லின் ஷீபாராணி வரவேற்றார். பேராசிரியை கலை சுசீலா நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவ ஆசிரியர்கள் ஷைனி, அபிஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.