குமரியில் சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலாப் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 100 பேர் இரண்டு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது திங்கள்கிழமை அதிகாலையில் கவிதா (27) என்ற பெண்ணில் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாராம்.