கன்னியாகுமரி

காவல் நிலையத்தில் இருந்து  தப்பி ஓடியவர் கைது

DIN

திருவட்டாறு காவல் நிலையத்தில்  விசாரணை யின் போது தப்பி ஓடியவரை போலீஸார் கைது செய்தனர்.
மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் ஜோசப் (35)  பி.எஸ்.சி. நர்சிங் படித்து விட்டு  கனடா நாட்டில் பணி செய்து வரும் இவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். மேலும் இவர், திருமணமான நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.  இவருக்கும், இவரது அண்டை வீட்டில் வசிக்கும் சுகின்லால் ஸ்டாலினுக்கும் (40) அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அருள்ஜோசப்,  சுகின்லால் ஸ்டாலினின் வீட்டுக் கண்ணாடியை சேதப்படுத்தினராம்.  இது குறித்து  சுகின்லால் ஸ்டாலின்  திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து,  போலீஸார் அருள் ஜோசப்பை  திருவட்டாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து  விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது,  அவர் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி திருவட்டாறு கேசவபுரம் சாலையில் ஓடினாராம். இதையடுத்து போலீஸார் அவரைப் துரத்திப் பிடித்து, வழக்குப் பதிந்து கைது  செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT