முகப்பு
கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே ஆற்றுமணல் கடத்திச் சென்ற மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:55 AM
பகிர்:

மார்த்தாண்டம் அருகே ஆற்றுமணல் கடத்திச் சென்ற மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியில் கோயில் திருட்டை விசாரிக்க வந்த தனிப்படை போலீஸார் சனிக்கிழமை திக்குறிச்சி - பயணம் சாலையில் நின்றுகொண்டிருந்தனர்.   அப்போது,  அப்பகுதி வழியாக மினி லாரி வந்தது.  போலீஸாரை கண்டதும் மினி லாரியை அதன் ஓட்டுநர் வேறு சாலை வழியாக ஓட்டிச் சென்றார்.  இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீஸார் மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  மார்த்தாண்டம் போலீஸார் விரைந்து சென்று மினி லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.  இதில் ஆற்றுமணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆற்று மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் மார்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் என்பவரை கைது செய்தனர். வாகன உரிமையாளர் சாந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.