இரவிபுதூரில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (செப். 12) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் வட்டம், இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமில் மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி செப். 12ஆம் தேதி (புதன் கிழமை) காலை 10 மணி முதல் பிற்கபல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, அப்பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.