கன்னியாகுமரி

குமரி மாவட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் சுற்றுலாப் பயணம்

DIN

மாற்றுத் திறனாளி சிறப்பு குழந்தைகளுக்கான ஒரு நாள் இன்பச் சுற்றுலா பேருந்தை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி  கொடியசைத்து செவ்வாய்க் கிழமை தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையம்  மாற்றுத் திறன் சிறப்புக்
குழந்தைகளுக்கான ஒரு நாள் இன்பச்சுற்றுலா அழைத்துச்செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுலாவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர்  கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில், குமரி மாவட்டத்தில் செயல்படும் 3  ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சிபெறும் சிறப்பு குழந்தைகள் 60 பேர் காளிகேசம் மற்றும் கன்னியாகுமரிக்குச் சென்று வந்தனர். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் ஆரம்பநிலை பயிற்சி மையங்களான சாந்தி நிலையம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, ரிஜாய்ஸ் ஆட்டிசம் சிறப்பு பள்ளி மற்றும் ஓரல் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT