கன்னியாகுமரி

இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

மார்த்தாண்டம் அருகே வெள்ளிக்கிழமை இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நந்தன்காடு, ஆர்.சி. தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜெய் (22). மார்த்தாண்டம் மீன் சந்தையில் மீன் பாரம் இறக்கும் தொழிலாளியான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் வேலைக்கு சென்றாராம். அங்கு வேலை பிடிக்காததால் ஒரு வாரத்திலேயே சொந்த ஊருக்கு திரும்பி வந்தாராம். தொடர்ந்து அவர் மார்த்தாண்டத்தில் மீன் பாரம் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனது அறையில் தூக்கில் தொங்கினாராம். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT