திற்பரப்பு மகாதேவர் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இத்திருவிழா ஏப்.12ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டி, திருக்கோயில்களின் தந்திரி சங்கரநாராயணரு கோயிலில் கொடியேற்றி வைத்தார். இதில்,கோயில் மேல்சாந்தி கணேசன் போற்றி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் ஸ்ரீபூதபலி நடைபெறுகிறது. மேலும் சிவபுராண பாராயணம் நடைபெறுகிறது. 9 ஆம் திருநாளில் இரவு பள்ளி வேட்டையும், 10 ஆம் திருநாளில் காலை 9 மணிக்கு ஆறாட்டும் நடைபெறுகிறது.