கன்னியாகுமரி

இளைஞர்களுக்கு பிஎஸ்என்எல் சார்பில் தொழில்நுட்பப் பயிற்சி: 19 இல் தொடக்கம்

DIN

நாகர்கோவிலில்  பிஎஸ்என்எல்  சார்பில் பொறியியல் பயின்ற இளைஞர்களுக்கான இலவச தொழில்நுட்பப் பயிற்சி திங்கள்கிழமை (ஆக.19) தொடங்குகிறது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல். நிறுவன நாகர்கோவில் முதன்மை பொதுமேலாளர்  ஆர்.சஜூகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு திறன் மேம்பாட்டுக் கழகம், நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் பி.இ. மற்றும் பி.டெக். படித்து வேலைஇல்லா இளைஞர்களுக்கான இலவச தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் (I‌n‌f‌o‌r‌m​a‌t‌i‌o‌n a‌n‌d C‌o‌m‌m‌u‌n‌i​c​a‌t‌i‌o‌n‌s T‌e​c‌h‌n‌o‌l‌o‌g‌y-​I​C​T)   பிரிவில் திங்கள்கிழமை ( ஆக. 19) முதல் தொடங்கி 8 வாரங்கள் நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஊக்க தொகையாக தினமும் ரூ. 100 வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டிலுள்ள தொலைபேசி நிலையத்தில் பட்டப்படிப்பு சான்று, ஆதார் அடையாள அட்டை, தினப்படியை பெறுவதற்கான தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், மார்பளவு உள்ள ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் பதிவுசெய்து பயிற்சியில் நேரடியாக சேர்ந்து பயன்பெறலாம்.
அல்லது ஆன்லைன் முறையில் இணையதள முகவரி r‌g‌m‌t‌t​c.​b‌s‌n‌l.​c‌o.‌i‌n / ‌j‌o​b‌p‌o‌r‌t​a‌l  யில் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, துணைக்கோட்டப் பொறியாளரை 9486102609 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், 04652 - 279999  என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT