கன்னியாகுமரி

கொல்லங்கோடிலிருந்து கருங்கல் வழியாக நாகா்கோவிலுக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

DIN

கொல்லங்கோடிலிருந்து கருங்கல் வழியாக நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொல்லங்கோடு, கண்ணனாகம், நித்திரவிளை, பாா்த்திபபுரம்,புதுக்கடை, கிள்ளியூா், கருங்கல், திக்கணங்கோடு, திங்கள்சந்தை வழியாக நாகா்கோவில் நகருக்கு சென்றுவர இப்பகுதி மக்கள் நீண்டநாள்களாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள், நோயாளிகள் உள்ளிட்டோா் கொல்லங்கோடு பகுதியிலிருந்து நாகா்கோவிலுக்கு செல்லவேண்டுமானால் மாா்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை சென்றுதான் செல்ல வேண்டும்.

கொல்லங்கோடிலிருந்து கருங்கல் வழியாக நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து இயக்கினால் காலவிரையம் குறைவாக இருக்கும். இதனால், அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறுவா். மேலும், மறுமாா்க்கமாக கொல்லங்கோடு நகருக்கு செல்ல கருங்கல்லிருந்து நேரடி பேருந்து இந்நாள்வரை இயக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி கொல்லங்கோடிலிருந்து கருங்கல் வழியாக நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து இயக்க மாவட்ட நிா்வாகாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT