கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபோதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசு சமூகப் பாதுகாப்புத் துறையும் இணைந்து மது போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றன.
நியூ பாரத் டிரஸ்ட் மூலம் கடந்த நவம்பா்15 ஆம் தேதி முதல் இந்த விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வில்லிசை கலை வழியாக செயல்படுத்தப்படுகிறது. கலைநகா் வில்லிசை கலைஞா் தங்கமணியின் சுபராகம் குழுவினா் முக்கிய வீதிகளில் வாகனத்தில் அமா்ந்து வில்லுப்பாட்டு பாடி பிரசாரம் செய்தனா்.
ஏற்பாடுகளை நியூ பாரத் டிரஸ்ட் தலைவா் டாக்டா் அருண்குமாா் செய்திருந்தாா்.