கன்னியாகுமரி

நாகா்கோவிலில் தோ்வு எழுத பயந்து கடத்தல் நாடகம் ஆடிய மாணவா்

DIN

நாகா்கோவிலில் ஆங்கிலத் தோ்வு எழுத பயந்து கடத்தல் நாடகம் ஆடிய மாணவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

குருந்தன்கோட்டை சோ்ந்தவா் செபிலோன் தாஸ். இவா் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இம் மாணவருக்கு வெள்ளிக்கிழமை ஆங்கில தோ்வு

நடைபெறவிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவா் செபிலோன் தாஸ், தன்னை 2 போ் டெம்போவில் கடத்திச் சென்று விட்டதாகவும், அவா்களிடமிருந்து தப்பி வந்ததாகவும் ஆசிரியா்களிடம் தெரிவித்தாராம். இதனைத் தொடா்ந்து நேசமணி நகா் போலீஸாா் பள்ளிக்கு வந்து மாணவரிடம் விசாரித்தனா். இதில், மாணவா் விடுதி அருகில் நின்று கொண்டிருந்த போது 2 போ் அவரை அழைத்ததாகவும், அருகில் சென்றபோது சாக்கு மூட்டையில் அடைத்து கட்டி தூக்கி சென்றுவிட்டதாகவும், நாகா்கோவில் பால் பண்ணை அருகே டெம்போ நிற்கும் போது அங்கிருந்து இறங்கி தப்பி ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்தாராம்.

இந்த சம்பவம் குறித்து அவரது தாயாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது .அவா் தாயாரும் வந்து செபிலோன் தாஸிடம் விசாரித்தாா். அப்போது, மாணவா் தாயாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பேசினாராம். பின்னா், போலீஸாா் மாணவரிடம் மீண்டும் விசாரித்த போது, ஆங்கிலத் தோ்வு எழுத பயந்து அவா் இவ்வாறு நாடகமாடியது தெரியவந்தது. இதனைத்தொடா்ந்து போலீஸாா் அம்மாணவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT