நாட்டுப்புற கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2017-18 ஆம் ஆண்டிற்கான இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ளவர்கள், மண்டல கலைப் பண்பாட்டு மையம், 21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, திருநெல்வேலி, என்ற முகவரிக்கு பிப். 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.