கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளான கருங்கல் துண்டத்துவிளை, மத்திகோடு, வடகரை ,மங்கலகுன்று, முள்ளங்கனாவிளை, மிடாலம், அம்சி, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (பிப்.24) சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளில் நடைபெற்றது. மிடாலம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சொர்ணபிரதாபன் ஆய்வு மேற்கொண்டார். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.