கன்னியாகுமரி

முக்கடல் அணை அருகே கால்வாயில் மூழ்கி இஸ்ரோ ஊழியர் பலி

DIN


முக்கடல் அணை அருகே கால்வாயில் மூழ்கி இஸ்ரோ ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.  விடுமுறை நாளான சனிக்கிழமை தனது நண்பர்களுடன் காரில் கன்னியாகுமரிக்கு வந்தார். 
பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, முக்கடல் அணை அருகேயுள்ள அனந்தனாறு கால்வாயில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நீர் சுழலில் தினேஷ் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது நண்பர்கள், தினேஷை காப்பாற்ற முயன்றனர். 
ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்காத நிலையில் தினேஷ் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸார், தினேஷின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT