கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ. 5.33 லட்சம் வழிப்பறி

DIN

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி, ரூ. 5.33 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையில், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முருகன் (42) கண்காணிப்பாளராகவும், தாழக்குடியைச் சேர்ந்த புஷ்பராஜ், பழவூரைச் சேர்ந்த முனியாண்டி ஆகியோர் ஊழியர்களாகவும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு கடையில் வசூலான பணம் ரூ. 5,33,880- ஐ எடுத்துக் கொண்டு முருகன் தனது பைக்கில் வீட்டுக்குச் சென்றார். அவருக்கு பின்னால் மற்றொரு பைக்கில் புஷ்பராஜும் சென்றார். குமாரபுரம் பகுதியை தாண்டி சென்றபோது, எதிரே பைக்கில் வந்த 3 பேர் முருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டியதோடு, அவர் வைத்திருந்த பணத்தையும், பைக்கையும் பறித்துச் சென்றனராம்.  சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த புஷ்பராஜ், பலத்த காயத்துடன் கிடந்த முருகனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து புஷ்பராஜ் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதி சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT