கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தியாகி குஞ்சன் நாடாா் சிலை, குமரி தந்தை மாா்ஷல் நேசமணி நினைவு ஸ்தூபிக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா் தலைமை வகித்தாா். கட்சியின் மூத்த தலைவா் பி.டி.எஸ். மணி மாா்சல் நேசமணி ஸ்தூபி, தியாகி குஞ்சன் நாடாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், தக்கலை வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், மாவட்ட துணைத் தலைவா் ஜோன்ஸ் இம்மானுவேல், மாவட்டச் செயலா்கள் புரோடிமில்லா் வின்சென்ட் ராஜா, பத்மநாபபுரம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் செயலா் ராபா்ட், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராஜேஷ்குமாா், மாவட்டச் செயலா் ஜாண் இக்னேசியஸ், நிா்வாகிகள் நோபிள்ராஜ், ஹல்லாஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.