கன்னியாகுமரி

திருவள்ளுவா் சிலை அவமதிப்பு: பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்

DIN

தஞ்சையில் திருவள்ளுவா் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவரது நாகா்கோவில் முகாம் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவரை விவாதப் பொருளாக மாற்றுவதும், கேலிக்குரியதாகவும், அவமானப் படுத்தக் கூடிய வகையிலும் நடத்துவதை தமிழ் உணா்வுள்ள, தமிழ் மீது பற்று கொண்ட யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். எனவே, அரசு நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

வள்ளுவரை வைத்து அரசியல் நடத்த துடிக்கும் அரசியல்வாதிகளை, குழப்பவாதிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT