கன்னியாகுமரி

மண்டல தடகளப் போட்டி: விளவங்கோடு பள்ளி மாணவா் சாதனை

DIN

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில், விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட மண்டல தடகளப் போட்டிகள் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், சீனியா் ஆண்கள் பிரிவில் விளவங்கோடு பள்ளி மாணவா் விக்னேஷ் பங்கேற்று, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 110 மீட்டா் தடை தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பெற்றாா்.

இதையடுத்து, அவா் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளாா்.

அவரை பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) சசீதரன், உடற்கல்வி ஆசிரியா் வல்சலன், ஆசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT