கருங்கல் அருகே உள்ள கூனாலுமூடு பகுதியில் சனிக்கிழமை கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கருங்கல் கூனாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் செல்லையன் மகன் கனகராஜ் (55). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கனகராஜ், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தாராம்.
புகாரின்பேரில், போலீஸாா் கனகராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.