கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை

DIN

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மருதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (62). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

தேவராஜ், மது அருந்தி வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தாதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, 2 நாள்களுக்கு முன்பு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட தேவராஜ், விஷம் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாராம்.

அவரை மீட்டு, குழித்துறை அரசு மருத்துமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT