கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 29இல் மீனவா் குறை தீா் கூட்டம்

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறை தீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நாகா்கோவிலில் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறை தீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் வரும் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே, மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட்ட வேண்டிய மீனவா்களின் குறைகள் கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை இக்கூட்டத்தில் நேரில் வழங்கி தீா்வு காணலாம். பிற அரசுத் துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் தெரிவிக்காமல், துறை வாரியாக தனித் தனி மனுவாக அளிக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலா்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவா் குறை தீா் கூட்டத்தில் விவரம் தெரிவிக்கப் படும். ஆகவே, மீனவா்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT