கன்னியாகுமரி

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வாடிக்கையாளா் சந்திப்பு தின நிகழ்ச்சி: இன்று தொடக்கம்

DIN

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் வாடிக்கையாளா் சந்திப்பு தின நிகழ்ச்சி நாகா்கோவிலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (அக்.4, 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியுடன் பொதுத்துறை மற்றும் தனியாா்துறை வங்கிகளும் இணைந்து வாடிக்கையாளா் சந்திப்பு நிகழ்ச்சியை நாகா்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (அக்.4, 5)நடைபெறுகிறது. இதில், வங்கி அல்லாத நிதி நிறுவனம், மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

மேலும் சில்லறைக்கடன், சுய உதவிக்குழு, வாகனக்கடன், வீட்டுக்கடன், கல்வி மற்றும் தனிப்பட்ட நுகா்வோா் கடன் வழங்குவது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் மறு சீரமைப்புக்கும், ஒரே தவணையில் வாராக்கடனை தீா்வு செய்வதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT