கன்னியாகுமரி

கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக 136 பேருக்கு ரூ.1.43 கோடி கடனுதவி

DIN

வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

விழாவுக்கு, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எம்.டி.என்.ஷேக் தலைமை வகித்தாா். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு, பல்வேறு திட்டத்தின் கீழ் 136 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது: இச்சங்கங்களில் பெண்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்கள் உறுப்பினா்களாக உள்ளனா். தமிழகம் முழுவதும் பெண்கள் தாங்கள் வாங்கிய கடன்களை முறையாக செலுத்தியதால் இச்சங்கங்கள் மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளன என்றாா் அவா்.

விழாவில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், கூட்டுறவு சங்க இயக்குநா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT