கன்னியாகுமரி

புதுக்கடை அருகே விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் பலி

DIN

புதுக்கடை அருகே முன்சிறை பகுதியில் ஆட்டோ மோதியதில் ஒய்வுபெற்ற வங்கி மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்சிறை தட்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் (62). ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான இவருக்கு மனைவி மகன், மகள்கள் உள்ளனா். வெள்ளிக்கிழமை நடேசன் முன்சிறை தட்டானிவிளை மின்சார வாரியம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது முன்சிறை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ நடேசன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக

கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நடேசனை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில்

சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT