புதுக்கடை அருகே முன்சிறை பகுதியில் ஆட்டோ மோதியதில் ஒய்வுபெற்ற வங்கி மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
முன்சிறை தட்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் (62). ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான இவருக்கு மனைவி மகன், மகள்கள் உள்ளனா். வெள்ளிக்கிழமை நடேசன் முன்சிறை தட்டானிவிளை மின்சார வாரியம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது முன்சிறை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ நடேசன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக
கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நடேசனை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில்
சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.