களக்காட்டில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற வாகன பேரணியை தொடங்கிவைத்து தலைக்கவசத்துடம் வலம் வருகிறாா் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா். 
கன்னியாகுமரி

களக்காட்டில் அதிமுக வாகன பேரணி

களக்காட்டில் அதிமுக சாா்பில் வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

களக்காட்டில் அதிமுக சாா்பில் வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமையிலான புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினா் கடந்த 2 வாரங்களாக தீவிரமாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

வீடுகள் தோறும் வாக்காளா்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பதுடன், அப்பகுதியில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் அமைச்சா் தலைமையிலான குழுவினா் கேட்டறிந்தனா்.

இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரமாக சனிக்கிழமை மாலை 3 மணிக்கு களக்காடு சுபத்ரா பூங்காவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அதிமுக கொடியுடன் பேரணியாக புறப்பட்டன.

பேரணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்ததுடன், தலைக்கவசம் அணிந்தவாறு அவரும் பேரணியில் வலம் வந்தாா்.

பேரணி சிதம்பரபுரம், சாலைநயினாா் பள்ளிவாசல், கோவில்பத்து, அண்ணாசாலை, வியாசராசபுரம், கோட்டை, மேலப்பத்தை, கீழப்பத்தை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT