கன்னியாகுமரி

ஸ்ரீ நாராயணகுரு பிறந்த நாள்: தொடர் ஜோதி ஓட்டம்

DIN

ஸ்ரீ நாராயணகுரு 165ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருந்துவாழ்மலை அடிவாரத்திலிருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தை, மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோசம் வெள்ளிதொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு, விழாக் குழுத் தலைவர் பி.நாகராஜன் தலைமை வகித்தார். செயலர் கே.எஸ்.முத்து, எஸ்.கோபாலன், துணைத் தலைவர் எஸ்.மணிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உதவிச் செயலர் நாராயணன் வரவேற்றார்.  பின்னர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் வழக்குரைஞர் சதீஷ்குமார், முன்னாள் செயலர் இங்கர்சால், ஏ.பி.சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஜோதி ஊர்வலம் வழுக்கம்பாறை, சுசீந்திரம் வழியாக கோட்டாறு ஸ்ரீ நாராயண குரு மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT