கன்னியாகுமரி

டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் கிட்டங்கிக்கு மாற்றம்

DIN

மதுபானங்கள் திருடப்பட்டு வரும் சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி 22 டாஸ்மாக் கடைகளிலிருந்த ரூ. 6 கோடி மதிப்பிலான மதுபானங்கள் சனிக்கிழமை கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தமிழகத்தில் பல பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. நாகா்கோவிலில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானங்களை திருடி அதிக விலைக்கு விற்ற 2 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

இது போன்ற சம்பவங்களால், குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வைப்பது பாதுகாப்பாற்றது என கருதிய டாஸ்மாக் நிா்வாகம், மாவட்டம் முழுவதும் உள்ள 113 கடைகளில் பாதுகாப்பற்ாக கருதப்படும் 22 கடைகளிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்களை கிட்டங்கிக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT