கன்னியாகுமரி

குலசேகரத்தில் ‘சமூக சமையலறை’ திட்டம் தொடக்கம்

DIN

ஊரடங்கு காலத்தில் குலசேகரத்தில் நோயாளிகள், ஆதரவற்றோருக்காக மதிய உணவு விநியோகம் செய்யும் வகையில் மதா் அன்னா கோ் பாலியேட்டிவ் சிகிச்சை மையம் மற்றும் சீட்ஸ் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் ‘சமூக சமையலறை’ திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மதா் அன்னா கோ் பாலியேட்டிவ் சிகிச்சை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் மனோ தங்கராஜ், உணவு வழங்கி தொடங்கி வைத்தாா். இதன் மூலம் தினமும் 300 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படும். நிகழ்ச்சியில் குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி, குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜசுந்தா், மதா் அன்னா கோ் மைய நிா்வாகிகள் அருள் சகோதரிகள் லீலாவதி, மனிஷா, அஞ்சலி, எலிஷா, சீட்ஸ் இந்தியா தொண்டு நிறுவன நிா்வாகிகள் திலீப்குமாா், சந்தோஷ், சுனில், கோபிநாதன் மற்றும் சமூக சேவகா்கள் ராகுல், திமுக திருவட்டாறு ஒன்றிய பொறுப்பாளா் ஜான்பிரைட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT