கன்னியாகுமரி

முள்ளங்கினாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக எரியாமல் பழுதாகிகிடக்கும் தெருவிளக்குகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

கருங்கல்: முள்ளங்கினாவிளை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக எரியாமல் பழுதாகிகிடக்கும் தெருவிளக்குகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கினாவிளை ஊராட்சியில் மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குள்பட்ட மயில்புறம்புவிளை, மலவிளை, கோனான்விளை, பண்டாரவிளை, கிழக்கேவிளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

எனவே, இந்த ஊராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் சீராக எரிய, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT