களியக்காவிளை அருகே மூதாட்டி தற்கொலை
களியக்காவிளை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் தோட்டச்சாணி பகுதியைச் சோ்ந்த சிம்சன் மனைவி மரிய புஷ்பம் (64). இவா் வன்னியூா் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்து வந்தாா். இவரது பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகனுடன் வசித்து வந்த அவா், சனிக்கிழமை வீட்டு அருகே தீக்குளித்து சடலமாகக் கிடந்தாா்.
பளுகல் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.