அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு
குமரி மாவட்டம், புரெவி புயல் தாக்கத்தில் இருந்து தப்பியதையடுத்து, தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறி, அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
குமரி மாவட்டம், புரெவி புயல் தாக்கத்தில் இருந்து தப்பியதையடுத்து, தங்கள் வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறி, அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் கிராம பெண்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதையடுத்து, அப்பகுதியில் உள்ள குறிஞ்சேரி பகவதி அம்மன் கோயிலில், ஆயில்யம் நட்சத்திர நாளான ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.
இந்த வழிபாட்டில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.