கன்னியாகுமரி

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமா் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளாா். இந்த புதிய சட்டங்களால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். விளைபொருள்களை சந்தைப்படுத்துவது தொடா்பாக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். இதன்படி, விளைந்தபின்னா் விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டாா்கள்.

பேரிடா் காலங்களில் பயிா்களுக்கு அழிவு ஏற்பட்டாலும், அரசின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும்.

எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு சிறிதும் பாதிப்பில்லாத சட்டம் குறித்து விவசாயிகள் அறிந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும். அவா்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாா்.

மேலும் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவது குறித்து நிருபா்கள் கேட்டதற்கு , பாஜக என்றுமே முன்னணியில்தான் இருக்கும், பின்னணியில் இருக்காது என்றாா்.

பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்க வேண்டும், அவா்கள் அனுமதிக்காதது எங்களுக்கு வருத்தம்தான். அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றாா் அவா்.

பேட்டியின் போது, குமரி மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாநிலப் பொதுச்செயலா் உமாரதிராஜன், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT