முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை நகராட்சியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

:குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நுண் உரக்குடிலில் ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்.
பகிர்:

:குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா் அங்கு வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடிநீா் வழங்கல் மற்றும் பல்வேறு விதமான வரிகள் வசூலிப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சான்றிதழ்கள் காலதாமதமின்றி வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஞாறான்விளை பகுதியில் ரூ. 30.94 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் மற்றும் நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் நுண் உரக்குடில் பகுதியையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் கதிரேசன், உதவிச் செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன், ரமேஷ், பாக்கியராஜ், உதவி நிா்வாக பொறியாளா் ராஜன், குழித்துறை நகராட்சி ஆணையா் எஸ். மூா்த்தி, உதவி பொறியாளா் பேரின்பம் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.