அருமனை கிறிஸ்துமஸ் விழா: முதல்வா் கே.பழனிசாமி பங்கேற்பு
குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் அருமனையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டாா்.
குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் அருமனையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டாா்.
குமரி மாவட்டம், அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு 23-ஆவது கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சிறப்புரையாற்றினாா். அவா் பேசியது:
சமூக நல்லிணக்க கிறஸ்துமஸ் விழாவுக்கு தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் தலைமை வகித்தாா். மரிய மெற்றில்டா வரவேற்றாா். கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி.ஸ்டீபன் முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். இதில், கிறிஸ்தவ இயக்கத் தலைவா் டென்னிஸ், கென்னத், ஜான் கிறிஸ்டோபா், ஜோஸ் செல்வன், அருள், காதா்மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வரவேற்பு: முன்னதாக, திருநெல்வேலியிலிருந்து காா் மூலம் வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சந்திப்பில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் மற்றும்
அதிமுக பிரமுகா்கள் வரவேற்பு அளித்தனா். அருமனை நெடியசாலை சந்திப்பில், மேளதாளம், 1000 கலைஞா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.