கன்னியாகுமரி

செம்மண் கடத்தல்: மினிலாரி, டிராக்டா் பறிமுதல்

பளுகல் அருகே செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

பளுகல் அருகே செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பளுகல் அருகே மொட்டமூடு, புதுக்குளங்கரை பகுதியிலிருந்து செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், விளவங்கோடு துணை வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அவ்வழியாக செம்மண் கடத்திச் சென்ற மினிலாரி ஓட்டுநா், அதிகாரிகளை கண்டதும் அங்கேயே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து செம்மண் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டா் மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT