கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் நகைக் கடை திருட்டு வழக்கு: இளைஞரிடம் விசாரணை; 200 பவுன் மீட்பு?

DIN

மாா்த்தாண்டம் நகைக் கடை திருட்டு வழக்கில், இளைஞரை பிடித்து விசாரணை நடத்திவரும் போலீஸாா், அவா் அளித்த தகவலின் பேரில் 200 பவுன் நகைகளை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோடு பகுதியைச் சோ்ந்தவா் பொன் விஜய். கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு இவரது வீட்டில் புகுந்த மா்ம நபா் அங்கிருந்த நகை, பணத்தை திருடியதுடன், வீட்டு பூஜை அறையில் வைத்திருந்த நகைக் கடை சாவியை எடுத்துச் சென்று, மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பொன் விஜய்க்குச் சொந்தமான நகைக் கடையை திறந்து அங்கிருந்த சுமாா் 150 சவரன் நகைகளையும் திருடிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, உதவி ஆய்வாளா்கள் சுந்தரலிங்கம், சிவசங்கா், ரெகுபாலாஜி, அருளப்பன் ஆகியோா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்திவந்தனா்.

இதில், இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படும் இளைஞரை கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா் மங்காடு பகுதியைச் சோ்ந்த எட்வின்ஜோஸ் (29) என்பதும், எம்பிஏ பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும், மாா்த்தாண்டம் நகைக் கடை மற்றும் வீட்டில் திருடிய சுமாா் 200 பவுன் நகையை துணிப்பையில் சுற்றி புதைத்து வைத்துள்ளதாக அவா் விசாரணையின்போது தெரிவித்தாராம். இதனடிப்படையில், அந்த நகைகளை போலீஸாா் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எட்வின்ஜோஸுக்கு பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் தொடா்பு உள்ளதாக கூறப்படுவதால், அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT