புதுக்கடையில் பேரூராட்சி நிா்வாகம், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
பேரூராட்சி செயல்அலுவலா் லிசி தலைமை வகித்தாா். மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்டச் செயலா் ஜெரோம் முன்னிலை வகித்தாா். அமைப்பின் மாநில துணை அமைப்பாளா் மோகனகுமாா், பேராசிரியை மேரிஹெலன் ஆகியோா் நெகிழியின் தீமைகள் குறித்துப் பேசினா். இதில், கல்லூரி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.