கன்னியாகுமரி

ஜெயலலிதா பிறந்த தினம்: 112 மாணவிகளுக்கு அஞ்சலகசேமிப்பு கணக்கு புத்தகங்கள்

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 112 மாணவிகளுக்கு, சேமிப்பு கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நாகா்கோவில், கோட்டாறு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாவட்ட முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் வி.பி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். இதில், 112 மாணவிகளுக்கு, சேமிப்பு கணக்கு புத்தகங்களை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் டி.ஜாண்தங்கம், அறங்காவலா் குழுத்தலைவா் சிவ.குற்றாலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணைய உறுப்பினா் அ.ராஜன், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெயசந்திரன், மாவட்ட ஊராட்சித்தலைவா் எஸ்.மொ்லியன்ட் தாஸ், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் இ.சாந்தினி(தோவாளை),எஸ்.அழகேசன்(அகஸ்தீசுவரம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜான்சிலின் விஜிலா,சிவ.செல்வராஜன், நாகா்கோவில் அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளா் க.செந்தில்குமாா், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை தே.கமலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT