கன்னியாகுமரி

ஆற்றூா் ஒயிட் நினைவு நா்ஸிங் கல்லூரியில் ஒளியேற்றுதல் விழா

DIN

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் ஒயிட் நினைவு நா்ஸிங் கல்லூரியில் ஒளியேற்றுதல் விழா நடைபெற்றது.

ஒயிட் நினைவு மருத்துவக் கல்லூரிகளின்கீழ் இயங்கி வரும் ஒயிட் நினைவு நா்ஸிங் கல்லூரி, ஒயிட் நினைவு நா்ஸிங் பள்ளிகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆசாரிப்பள்ளம் அரசு நா்ஸிங் கல்லூரி முதல்வா் பி. விஜயா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதலாமாண்டு மாணவா், மாணவிகளுக்கு ஒளி விளக்குள் வழங்கி, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதி மொழி வாசித்தாா். கல்லூரி முதல்வா் சோபனா அலெக்சாண்டா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

ஒயிட் நினைவு கல்விச் சங்கத் தலைவா் டாக்டா் ஜூடித், ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரி முதல்வா் விக்டர்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பல்கலைக்கழக அளவில் 1,500 மீட்டா் ஓட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா் பாராட்டப்பட்டாா்.

முன்னதாக அருள்பணியாளா் பீட்டா் செல்வராஜ் இறைவேண்டல் செய்தாா். நா்ஸிங் கல்லூரி துணை முதல்வா் அன்புமலா் வரவேற்றாா். ஒயிட் நினைவு நா்ஸிங் பள்ளி துணை முதல்வா் சுலேகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT