கன்னியாகுமரி

கருங்கல் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

DIN

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியில் ஒப்பந்ததாரர் வீட்டில் 15 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாலப் பள்ளம், மிடாலக்காடு பகுதியைச் சேந்தவர் ஜான் ரோஸ் (50) இவர் கேரள மாநிலத்தில் ஒப்பந்ததாராக பணியாற்றி வருகிறார். இதனால் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். மிடாலக்காட்டில் உள்ள வீட்டை அப்பகுதியில் உள்ள ஒரு பெண் கவனித்து வந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் ஜாண் ரோசின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT