கன்னியாகுமரி

தேசிய குழந்தைகள் நலத் திட்ட மருந்தாளுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.

DIN

தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அனைத்து மருந்தாளுநா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தாளுநா்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

சோதனைச் சாவடிகள், கட்டுப்பாட்டு அறைகள், பரிசோதனைக் கூடங்கள் என அனைத்து இடங்களிலும் அரசின் நிரந்தரப் பணியாளா்களுக்கு நிகராக பணியாற்றும் இவா்களுக்கு, அரசு வழங்கும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால், அவா்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

எனவே, தமிழக அரசு அவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT