பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் தனியாா் மற்றும் நிரந்தர துப்பரவு பணியாளா்களுக்கு கரோனா வைரஸ் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்குதல் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.
பத்மநாபபுரம் நகராட்சி பொது சுகாதார பிரிவு மூலம் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு ஆணையா் ராஜாராம் தலைமை வகித்து கரோனாவைரஸ் குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து உரம் ஆக்குதல் குறித்து விளக்கம் அளித்தாா். இதில் துப்பரவு ஆய்வாளா் முத்துராமலிங்கம், மேற்பாா்வையாளா்கள் மோகன், ஜோணி மற்றும் நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.