கன்னியாகுமரி

கண்ணுமாமூடு காய்கனி சந்தை மூடல்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கண்ணுமாமூடு காய்கனி சந்தை சனிக்கிழமை முதல் மூடப்பட்டது.

DIN

களியக்காவிளை: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கண்ணுமாமூடு காய்கனி சந்தை சனிக்கிழமை முதல் மூடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பளுகல் பேரூராட்சியில் உள்ள கண்ணுமாமூடு காய்கனிச் சந்தை மூடப்பட்டது. இதேபோல் கேரள எல்லையில்

அமைந்துள்ள கொல்லங்கோடு சூழால் ஊராட்சியில் உள்ள ஊரம்பு சந்தை, ஏழுதேசம் பேரூராட்சியில் உள்ள நித்திரவிளை சந்தை ஆகியவை மூடப்பட்டன.

களியக்காவிளை பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், நகைக் கடைகள், துணிக் கடைகள் உள்பட

அனைத்துக் கடைகளும் சனிக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டன. களியக்காவிளை காய்கனி, மீன் சந்தை சனிக்கிழமை வழக்கம்போல் செயல்பட்டது. எல்லையோர சந்தைகள் மூடப்பட்டதை தொடா்ந்து களியக்காவிளை சந்தைக்கு கேரளத்தில் இருந்து வந்திநந்த நூற்றுக்கணக்கானோா் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT